Skip to main content

Posts

Showing posts from August, 2023

உணர்வு

உன்னை பார்க்க, காத்திருந்தேன் பார்க்க இயலுமா என்று வியந்திருந்தேன் உன்னால் நான் பெற்றதும் பல, இழந்ததும் சில பெற்றதோ மறக்குமா, இழந்ததோ யாதுமா நினைவிலோ நீ இருக்க, கனவில் நீ மாற மாற்றம் நீ கொண்டாலும், என்னுடனே நீ வாழ மாறாதது ஏதும் உண்டோ, மாற்றம் ஏற்க நீ இருக்க நான் கொண்ட மாற்றங்களின் தடயமும் நீ தானோ நீ இல்லாமல் பித்தனென், நீ வந்ததும் என்னை அறிந்தேன் செயல்பாட்டை நாம் கற்றோம், விடைகளை நாம் பயின்றோம் ஒன்றாக நீ இருக்க, அச்சங்களை நான் துளைத்தேன் காலமும் நீ இருக்க, அர்த்தங்களை நான் அறிவேன்                                                                 - ஹரிஹரன் © 2023  Hariharan Arunachalam. All rights reserved.

காற்று

உயிர்களை வாழவைக்கும் காற்று காற்று இல்லாமல் உயிர்  இல்லை. ஆனால், உயிர் இல்லாமலும் காற்று உண்டு வாசத்தில் நீ உண்டு , உயிர் சுவாசத்திலும் நீ உண்டு உன்னை எண்ணி பாராமல், வாழந்த நாட்களும் உண்டு பிரதேசம் போனாலும், நீ விட்டு போவதில்லை என்னுடன் வந்த நீயும், மாறியது என்ன கதை நீ மாறிப்போனாலும், உன்னை வெறுக்க மனம் இல்லை பல யுகம் வாழ்ந்த உன்னில், மாற்றம் பல வந்தது ஏனோ யாம் செய்த பிழைகளால், நீ மாற்றம் கொண்டதென்ன எம்மை காக்க நீர் உண்டு, உம்மை காக்க யாம் வருவோம்                                                                                          -      ஹரிஹரன் ©  2023  Hariharan Arunachalam.  All  rights reserved.

கோவில்

சத்தம் பொடும் மனம் வந்து சாந்தி பெரும் இண்டமாக, கலாச்சாரம் வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஓவியங்கள் ,  இவனைத்தும் நான் பார்த்து மெய்மறந்து போனதென்ன, யார் செய்த சிற்பங்கள் , தெரிந்துகொள்ள வழியில்லை,  கலை இன்றோ போகவில்லை , களைங்யனோ போகின்றான்,  இவ்வொலகம் இது என்று பேசாமல் பேசும் இடம்  ,  எம்மதம் ஆனாலும் , நம்பிக்கை கூடும் இடம் இது                                                                             -ஹரிஹரன்  ©  2022  Hariharan Arunachalam.  All  rights reserved.