உயிர்களை வாழவைக்கும் காற்று
காற்று இல்லாமல் உயிர் இல்லை. ஆனால்,
உயிர் இல்லாமலும் காற்று உண்டு
வாசத்தில் நீ உண்டு , உயிர் சுவாசத்திலும் நீ உண்டு
உன்னை எண்ணி பாராமல், வாழந்த நாட்களும் உண்டு
பிரதேசம் போனாலும், நீ விட்டு போவதில்லை
என்னுடன் வந்த நீயும், மாறியது என்ன கதை
நீ மாறிப்போனாலும், உன்னை வெறுக்க மனம் இல்லை
பல யுகம் வாழ்ந்த உன்னில், மாற்றம் பல வந்தது ஏனோ
யாம் செய்த பிழைகளால், நீ மாற்றம் கொண்டதென்ன
எம்மை காக்க நீர் உண்டு, உம்மை காக்க யாம் வருவோம்
- ஹரிஹரன்
© 2023 Hariharan Arunachalam. All rights reserved.
Comments
Post a Comment