Skip to main content

விதிகள்

 காலம் தோன்றும் முன்பே உருவாகிய விதிகள் 

அதை எண்ணிய கணிதம்

விதி விளங்க கணிதம் தேவை, கணிதம் விளங்க விதி உண்டு

மனிதன் இருக்க விதிகள் தேவையோ, விதிகள் அறிய மனிதன் தேவையோ

கணிதம் அறிந்த மனிதன், வாழ்வின் பொருள் அறியாதது விதியோ

நூற்றாண்டுகள் கடந்தும் தீரா கேள்வி உண்டெனில், அது இயற்கையின் விதிகளை என்றோ

அதை புரிந்த மனிதன் உண்டோ, காலம் தாண்டிய பொருள் உண்டோ

காலம் தாண்டிய அறிவு உண்டு, அறிவு கானா கேள்வி உண்டு

கேள்வி இல்லா விடை இல்லை, விடை கானா காலம் இல்லை

                                                            - ஹரிஹரன்


© 2024 Hariharan Arunachalam. All rights reserved.

Comments