Skip to main content

Posts

சுதந்திரம் : வழியும் கனவும்

வரலாறு சொன்ன விடுதலை பாடங்கள் நாம் வாழ இறந்த மகான்களும் முன்னோர்களும் கண்ட கனா நிறைவேற்ற வழி அன்று இல்லையோ  பிற்கால தலைமுறைக்கு வழி விளக்கிப் போனாரா வழி இன்று இருந்தாலும் கனா மாறி போனதென்ன கனா பல இருந்தாலும் திசை சிதறி போகிறதோ அல்லது பலருக்கு இங்கு வழி இன்னும் இல்லையோ  இருந்தும் ஒரு கூட்டம், இல்லாமலும் ஒரு கூட்டம், இருந்தும் செயல் இல்லா சுதந்திரத்தின் பயன் உண்டோ  இல்லாமல் போராடி வந்த வழி வரலாறோ  இறுதியில் அவ்வழியில் செய்த செயல்களும் வரலாறோ                                                                                           -ஹரிஹரன்  © 2025 Hariharan Arunachalam. All rights reserved.
Recent posts

பயணம்

மனித பயணம், அது முடியா ஒன்று  மனித பயணம், அது விலங்கா ஒன்று பயணம் ஒன்று இருபது அறிந்தோம்,  திசைகள் பல உள்ளபொதும், போய் சேரும் இடம் அறிவோமா.. இலக்கு முடிவு செய்த பயணம் இல்லையோ, இது பயணம் முடவுசெய்யும் இலக்கு தானோ.. ஒருமை இல்லாமல் பயணம் வீணோ, பயணம் இல்லா ஒரிமையும் வீணோ.. சரியான பயண முறையால், பயணம் இங்கு நீலுமோ பயணம் தவறாக, இலக்கு கூடிவருமோ..                                                                    - ஹரிஹரன் ©  2025   Hariharan Arunachalam .  All  rights reserved.

அடையாளம் !

ஒருமை உணர உருவான கருவியோ பல கருவி முளைக்க, பயன் மாறி போனதோ பயன் மாறி போனதால், பிரிவினை வழந்ததோ அக்கருவி திறந்தால் பிரிவினை முடியுமோ புது ஒருமை வளர மரு கருவி தேவையோ இச்சூழலில் சிக்கிய மனிதர்கள் நாம்தானோ இறுதியில் இங்கு மனிதம் மட்டும் ஜைகும்மோ ஜெயித்தாலும் இறுதியில் மனிதமும் ஓர் கறுவியோ                                                                              - ஹரிஹரன் ©  2025   Hariharan Arunachalam .  All  rights reserved.

புதிர் தான் விடையா ?

 கேள்விகள் ஆயிரம், விடைகளும் கோடியாம் விடைகள் விளங்க, இன்னொரு கேள்வியாம் உயிர் ஈன்ற நாள்முதல், கேள்விகள்  முடியவில்லை ஒரு விடை முடிய, மாரு விடை தேடினோம் எதை நோக்கி நாம் தேட ? பாதை இங்கு பல உண்டு பாதைகளும் முடிவதில்லை, தேடல்களும் ஓய்வதில்லை அழிய தான் வந்தோமோ ? இதுவும் ஒரு கேள்வி தானோ ? புதிர் ஒன்று விளங்காமல், கேள்வி பல கேட்டோமோ புதிர் விளங்க கேள்வி கேட்க, நாம் இங்க மறந்தோமோ  ? இப்புதிர் புரிந்த மனிதர், இவ்வுலகில் வாழ்வது உண்டோ ?                                                                                 - ஹரிஹரன் ©  2025   Hariharan Arunachalam .  All  rights reserved.

விதிகள்

 காலம் தோன்றும் முன்பே உருவாகிய விதிகள்  அதை எண்ணிய கணிதம் விதி விளங்க கணிதம் தேவை, கணிதம் விளங்க விதி உண்டு மனிதன் இருக்க விதிகள் தேவையோ, விதிகள் அறிய மனிதன் தேவையோ கணிதம் அறிந்த மனிதன், வாழ்வின் பொருள் அறியாதது விதியோ நூற்றாண்டுகள் கடந்தும் தீரா கேள்வி உண்டெனில், அது இயற்கையின் விதிகளை என்றோ அதை புரிந்த மனிதன் உண்டோ, காலம் தாண்டிய பொருள் உண்டோ காலம் தாண்டிய அறிவு உண்டு, அறிவு கானா கேள்வி உண்டு கேள்வி இல்லா விடை இல்லை, விடை கானா காலம் இல்லை                                                                  - ஹரிஹரன் © 2024 Hariharan Arunachalam . All rights reserved.

உணர்வு

உன்னை பார்க்க, காத்திருந்தேன் பார்க்க இயலுமா என்று வியந்திருந்தேன் உன்னால் நான் பெற்றதும் பல, இழந்ததும் சில பெற்றதோ மறக்குமா, இழந்ததோ யாதுமா நினைவிலோ நீ இருக்க, கனவில் நீ மாற மாற்றம் நீ கொண்டாலும், என்னுடனே நீ வாழ மாறாதது ஏதும் உண்டோ, மாற்றம் ஏற்க நீ இருக்க நான் கொண்ட மாற்றங்களின் தடயமும் நீ தானோ நீ இல்லாமல் பித்தனென், நீ வந்ததும் என்னை அறிந்தேன் செயல்பாட்டை நாம் கற்றோம், விடைகளை நாம் பயின்றோம் ஒன்றாக நீ இருக்க, அச்சங்களை நான் துளைத்தேன் காலமும் நீ இருக்க, அர்த்தங்களை நான் அறிவேன்                                                                 - ஹரிஹரன் © 2023  Hariharan Arunachalam. All rights reserved.

காற்று

உயிர்களை வாழவைக்கும் காற்று காற்று இல்லாமல் உயிர்  இல்லை. ஆனால், உயிர் இல்லாமலும் காற்று உண்டு வாசத்தில் நீ உண்டு , உயிர் சுவாசத்திலும் நீ உண்டு உன்னை எண்ணி பாராமல், வாழந்த நாட்களும் உண்டு பிரதேசம் போனாலும், நீ விட்டு போவதில்லை என்னுடன் வந்த நீயும், மாறியது என்ன கதை நீ மாறிப்போனாலும், உன்னை வெறுக்க மனம் இல்லை பல யுகம் வாழ்ந்த உன்னில், மாற்றம் பல வந்தது ஏனோ யாம் செய்த பிழைகளால், நீ மாற்றம் கொண்டதென்ன எம்மை காக்க நீர் உண்டு, உம்மை காக்க யாம் வருவோம்                                                                                          -      ஹரிஹரன் ©  2023  Hariharan Arunachalam.  All  rights reserved.